கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த தேங்காய்கள் சாலையில் சிதறிய நிலையில், ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோவை: கோவை உக்கடம் பகுதியில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு தேங்காய்கள் ஏற்றப்பட்ட ஈச்சர் லாரி சென்று கொண்டிருந்தது. கரும்புக்கடை அருகே சென்றபோது, லாரியின் டயர் ஒன்று திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட தேங்காய்கள் சாலையில் சிதறி விழுந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி கவிழ்ந்தபோது அருகில் பிற வாகனங்கள் எதுவும் நெருக்கமாக இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள், சாலையில் சிதறிக் கிடந்த தேங்காய்களை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையை சீரமைத்தனர்.
கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு தேங்காய்கள் ஏற்றப்பட்ட ஈச்சர் லாரி சென்று கொண்டிருந்தது. கரும்புக்கடை அருகே சென்றபோது, லாரியின் டயர் ஒன்று திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட தேங்காய்கள் சாலையில் சிதறி விழுந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி கவிழ்ந்தபோது அருகில் பிற வாகனங்கள் எதுவும் நெருக்கமாக இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள், சாலையில் சிதறிக் கிடந்த தேங்காய்களை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையை சீரமைத்தனர்.