கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சமையல் கூடம், Bio-Mining மையம், மொத்த காய்கறி சந்தைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அவர்கள் இன்று (19.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதலில், மேற்கு மண்டலம் வார்டு எண் 72க்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலையில் அமைந்துள்ள காலை உணவு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளுக்காக உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். கூடுதலாக மேற்கூரை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அப்பகுதியில் அமைந்துள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அடுத்ததாக, வார்டு எண் 33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியில் அமைந்துள்ள Bio-Mining குப்பைகளை மறுசுழற்சி செய்யும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை விரைவுபடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அதே வார்டு 33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியிலுள்ள தக்காளி மார்க்கெட் மற்றும் வார்டு எண் 45க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 38க்கு உட்பட்ட வடவள்ளி, பாலாஜி நகர் பகுதியில் பொதுமக்களிடம் நேரில் குறைகளைக் கேட்டறிந்தார். அப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா என்பதைக் கேட்டறிந்தார். குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் Vijayakumar, உதவி ஆணையர் Narmada, மாநகர கல்வி அலுவலர் Gunasekaran, செயற்பொறியாளர் Jegan, உதவி சுகாதார அலுவலர் Savitha, மண்டல செயற்பொறியாளர் Radhakrishnan, உதவி பொறியாளர்கள் Karthikeyan, Manjuladevi, சுகாதார ஆய்வாளர் Rajendran உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
முதலில், மேற்கு மண்டலம் வார்டு எண் 72க்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலையில் அமைந்துள்ள காலை உணவு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளுக்காக உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். கூடுதலாக மேற்கூரை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அப்பகுதியில் அமைந்துள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அடுத்ததாக, வார்டு எண் 33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியில் அமைந்துள்ள Bio-Mining குப்பைகளை மறுசுழற்சி செய்யும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை விரைவுபடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அதே வார்டு 33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியிலுள்ள தக்காளி மார்க்கெட் மற்றும் வார்டு எண் 45க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 38க்கு உட்பட்ட வடவள்ளி, பாலாஜி நகர் பகுதியில் பொதுமக்களிடம் நேரில் குறைகளைக் கேட்டறிந்தார். அப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா என்பதைக் கேட்டறிந்தார். குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் Vijayakumar, உதவி ஆணையர் Narmada, மாநகர கல்வி அலுவலர் Gunasekaran, செயற்பொறியாளர் Jegan, உதவி சுகாதார அலுவலர் Savitha, மண்டல செயற்பொறியாளர் Radhakrishnan, உதவி பொறியாளர்கள் Karthikeyan, Manjuladevi, சுகாதார ஆய்வாளர் Rajendran உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.