சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்பை சேகரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளையும் ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27-க்குட்பட்ட பீளமேடு பகுதிகளில் நியாய விலைக் கடை ஆய்வு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று மேற்கொண்டார்.



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பீளமேடு கோபால் நகர் பகுதியில் செயல்படும் சிங்காநல்லூர் கூட்டுறவு நியாய விலைக் கடையில் இன்று காலை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கிறதா என்பதை நேரடியாக மக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நியாய விலைக் கடை ஊழியர்களும் உடனிருந்தனர்.



தொடர்ந்து பீளமேடு பேரநாயுடு வீதியில் தினசரி குப்பை சேகரிக்கும் பேட்டரி ஆட்டோ முறையாக வருகிறதா என்பதை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை சேகரிப்பு பணிகள் குறித்து விசாரித்த அவர், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தனித்தனியாகப் பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.



அதேபோல் பீளமேடு பெரியார் வீதியில் சாலையோர குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இந்தப் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளை தினசரி முழுமையாக அகற்றி தூய்மையாக பராமரிக்குமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு வலியுறுத்தினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...

கோவையில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

கோவை மாநகராட்சியில் மதிப்பிடப்பட்ட 1.11 லட்சம் தெருநாய்களில் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது....

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...

குப்பேபாளையத்தில் நாளை (18.08.2026) மின்தடை அறிவிப்பு

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பேபா...