சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்பை சேகரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளையும் ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27-க்குட்பட்ட பீளமேடு பகுதிகளில் நியாய விலைக் கடை ஆய்வு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று மேற்கொண்டார்.



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பீளமேடு கோபால் நகர் பகுதியில் செயல்படும் சிங்காநல்லூர் கூட்டுறவு நியாய விலைக் கடையில் இன்று காலை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கிறதா என்பதை நேரடியாக மக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நியாய விலைக் கடை ஊழியர்களும் உடனிருந்தனர்.



தொடர்ந்து பீளமேடு பேரநாயுடு வீதியில் தினசரி குப்பை சேகரிக்கும் பேட்டரி ஆட்டோ முறையாக வருகிறதா என்பதை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை சேகரிப்பு பணிகள் குறித்து விசாரித்த அவர், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தனித்தனியாகப் பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.



அதேபோல் பீளமேடு பெரியார் வீதியில் சாலையோர குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இந்தப் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளை தினசரி முழுமையாக அகற்றி தூய்மையாக பராமரிக்குமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு வலியுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...