கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவம் தொடர்பாக கேரளா மற்றும் வாளையார் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தமிழக–கேரளா எல்லையான வாளையார் அருகே மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும் அதன் குட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் நேற்றிரவுசுமார் 11.40 மணியளவில் காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் யானை மற்றும் குட்டி யானை மீது மோதியது.
ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இரு யானைகளும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

சம்பவம் கேரள மாநில எல்லைக்குள் நிகழ்ந்திருந்தாலும், தமிழக எல்லையில் இருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் நடைபெற்றதால், வாளையார் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து, யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து வாளையார் வனத்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ரயில்வே பாதைகளில் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் நேற்றிரவுசுமார் 11.40 மணியளவில் காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் யானை மற்றும் குட்டி யானை மீது மோதியது.
ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இரு யானைகளும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
சம்பவம் கேரள மாநில எல்லைக்குள் நிகழ்ந்திருந்தாலும், தமிழக எல்லையில் இருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் நடைபெற்றதால், வாளையார் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து, யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து வாளையார் வனத்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ரயில்வே பாதைகளில் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.