கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக மீட்டு மீண்டும் மற்ற குஞ்சுகளுடன் சேர்த்தனர். பெண் மயில் நான்கு குஞ்சுகளை பாதுகாத்து வருகிறது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல் மேல் இடுக்கில் பெண் மயில் ஒன்று நான்கு குஞ்சுகளை ஈன்று பாதுகாத்து வந்த நிலையில், இன்று ஒரு மயில் குஞ்சு தவறி ஜன்னல் ஸ்லாப்பில் விழுந்த சம்பவம் நடைபெற்றது.

பெண் மயிலும் குஞ்சை காப்பாற்ற முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக மயில் குஞ்சை மீட்டு, மீண்டும் ஜன்னல் இடுக்கில் மற்ற குஞ்சுகளுடன் சேர்த்தனர்.

மீட்பு நடவடிக்கைக்கு பிறகு, பெண் மயில் BSNL அலுவலக மாடியில் சுற்றித் திரிந்தவாறு வேறு எந்த பறவையும் வராத வண்ணம் தனது குஞ்சுகளை பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்று தீயணைப்பு மீட்பு பணி துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கை காட்டுயிர் பாதுகாப்பில் தீயணைப்பு துறையினரின் விரைவான செயல்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...