தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி இன்று (ஆகஸ்ட் 3), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் அரசு விழாவாக ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில், கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தனின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.



நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ சரத், 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எ. கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் கே. சுபாஷ், மாநகரப் பொருளாளர் வடவள்ளி ரவி, மாநகர துணைத் தலைவர் சிக்கன் சின்னத்தம்பி, மாநகரச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்சியின் மாநகர துணைச் செயலாளர் கவுண்டம்பாளையம் சீனிவாசன் செய்திருந்தார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஈரோடு மாவட்டம், ஓடநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...