கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், படித்துறையில் நீர்வரத்து இல்லாததால் விழா வழக்கமான உற்சாகத்தை இழந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி ஏற்பாடு செய்தது.
கோவை: ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு, தர்ப்பண மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தை இழந்தது. இருப்பினும், ஐதீகத்தின்படி பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை படித்துறையில் முன்னோர்களுக்கு படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.
ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

மேலும், விழாவையொட்டி பக்தர்கள் பயன்படுத்தி சென்ற பூஜைப் பொருட்கள் மற்றும் கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தை இழந்தது. இருப்பினும், ஐதீகத்தின்படி பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை படித்துறையில் முன்னோர்களுக்கு படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.
ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
மேலும், விழாவையொட்டி பக்தர்கள் பயன்படுத்தி சென்ற பூஜைப் பொருட்கள் மற்றும் கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.