பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், படித்துறையில் நீர்வரத்து இல்லாததால் விழா வழக்கமான உற்சாகத்தை இழந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி ஏற்பாடு செய்தது.

கோவை: ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு, தர்ப்பண மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தை இழந்தது. இருப்பினும், ஐதீகத்தின்படி பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை படித்துறையில் முன்னோர்களுக்கு படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.



மேலும், விழாவையொட்டி பக்தர்கள் பயன்படுத்தி சென்ற பூஜைப் பொருட்கள் மற்றும் கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...