சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் பண நோட்டுகளை மட்டும் திருடிச் சென்று, சில்லறை நாணயங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை அங்கேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில், மர்ம நபர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டில் ஈடுபட்டவர்கள், உண்டியலை கோவில் வளாகத்திலிருந்து அருகிலுள்ள காலியிடத்திற்கு எடுத்துச் சென்று உடைத்த பின்னர், அதிலிருந்த பண நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உண்டியலில் இருந்த சில்லறை நாணயங்களையும், கோவிலில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களையும் திருடாமல் அங்கேயே விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கொரோனா காலகட்டத்திலும் இதே கோவிலில் இதுபோன்ற உண்டியல் திருட்டு நடைபெற்றிருந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்வதுடன், கோவில்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த காவல்துறையும் சம்பந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...