கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிசிஸ் மையம் மற்றும் குடிநீர் தேக்கம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும் விசாரித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



வார்டு எண் 95-க்கு உட்பட்ட NP இட்டேரி சாலையில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை ஆணையர் முதலில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து NP இட்டேரி சாலை மற்றும் குராதுல் தெரு பகுதியில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று களஆய்வு மேற்கொள்ளும் பதிவேடுகளை நேரில் சரிபார்த்தார்.



இதனைத் தொடர்ந்து, ஆணையர் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் நேரடியாக உரையாடினார். குடிநீர் விநியோகம், குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தல், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஏதேனும் புகார்கள் உள்ளனவா என்று விசாரித்தார். மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

NP இட்டேரி சாலையில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மைய கூடுதல் கட்டடத்தையும் ஆணையர் ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு வழிகாட்டினார்.



அதனைத் தொடர்ந்து, போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் Dialysis மையம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார். இந்த திட்டம் சிறுநீரக நோயாளிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார்டு எண் 97-க்கு உட்பட்ட பிள்ளையார்புரம் நீர்த்தேக்க தொட்டியிலும் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவுகள் தரமானதா என்பதை நேரில் சரிபார்த்து உறுதிசெய்தார். குடிநீர் தரம் பேணப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் (பொது) நர்மதா, மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் ஈஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

தெற்கு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்வதற்காக ஆணையர் தொடர்ந்து களஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...