கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 17 நிலவரப்படி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து பெருகி வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.


Coimbatore: தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர்வரத்தால், ஜூலை 17 நிலவரப்படி நீர்மட்டம் 56.2 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 227 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.




பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஜூலை 17 தேதி நிலவரப்படி நீர்மட்டம் 19.28 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,172 கன அடி நீர்வரத்து பெருகி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 810 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.




வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணையின் மொத்த கொள்ளளவு 160 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர்வரத்தால், ஜூலை 17 நிலவரப்படி நீர்மட்டம் 91.92 அடியாக பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 811 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,355 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால், மாவட்டத்தின் முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது விவசாயிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் நல்ல செய்தியாக அமைந்துள்ளது.


Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...