சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலம்.


கோவை: ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் பணம் பறித்து வந்த இருவரை l கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த போலீசார், கோவையில் வசிக்கும் வடமாநில வியாபாரிகளின் செல்போன் எண்களை பெற்று, போலீசில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் தொடர்புகொண்டு வந்துள்ளனர்.

அவர்கள், "நீங்கள் ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளீர்கள். உங்களை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், உங்கள் புகைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவோம். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பலர் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வடவள்ளி பி.என்.புதூரைச் சேர்ந்த பின்னி மற்றும் சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட கிஷோர் குமார் மீது கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...