கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து, உடனடியாக நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்கள், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றுதிரண்டு புகார் மனு அளித்துள்ளனர்.






சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் பவன் குமார்அலுவலகத்திற்கு வருகை தந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதிசெய்யும் பணிகளிலும், இயன்முறை சிகிச்சையாளர்களாகவும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.






தங்களுக்கு 2028ஆம் ஆண்டு வரை பணி முடிவடையும் தேதி உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் குடும்பச் செலவுகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவு, வங்கிக் கடன் தவணைகள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.






ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதுடன், பணியிலும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டனர். நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தையும் உடனடியாக வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மாதந்தோறும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






அதேசமயம், இத்துறை சார்ந்த அலுவலர்கள் மெத்தனமான போக்குடன் செயல்படுவதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து, விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால் மேலும் தீவிரமான போராட்டங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: நாளை பல பகுதிகளில் மின்தடை

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது...

வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்...

ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்...

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...