வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று பேரிடம் கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று அதிகாரிகள் இச்சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாளையார் சோதனைச்சாவடியில் தினமும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சோதனைச்சாவடியில்பணியாற்றும் அதிகாரிகள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.




இச்சோதனையின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் அவரது உதவியாளர்களான கல்பனா, பத்மா ஆகியோரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாளையார் சோதனைச்சாவடியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்திருந்த நிலையில், இந்த அதிரடி சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...