வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று பேரிடம் கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று அதிகாரிகள் இச்சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாளையார் சோதனைச்சாவடியில் தினமும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சோதனைச்சாவடியில்பணியாற்றும் அதிகாரிகள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.




இச்சோதனையின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் அவரது உதவியாளர்களான கல்பனா, பத்மா ஆகியோரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாளையார் சோதனைச்சாவடியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்திருந்த நிலையில், இந்த அதிரடி சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

Newsletter

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: நாளை பல பகுதிகளில் மின்தடை

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது...

வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்...

ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்...

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...