கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடங்கியது. முதல் நாளில் 250 தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில் பயன் பெற்றனர். இம்முகாம் ஜூலை 21 வரை நடைபெறும்.


Coimbatore: கோவை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் இன்று (08.07.2026) தொடங்கியது. முதல் நாளில் சுமார் 250 தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில் பயன் பெற்றனர்.



ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 08.07.2026 முதல் 21.07.2026 வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.

இன்று மத்திய மண்டலம், சீத்தாலட்சுமி நகர்ப்புர முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருதயம், நுரையீரல், கண்பல், எலும்பு மூட்டு மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம், தோல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நல மருத்துவம் ஆகிய சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஹீமோ குளோபின் அளவு கண்டறிதல், இரத்தவகை கண்டறிதல், இரத்த சக்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, பித்த திரமி, யூரியா கிரியட்டினின், V.D.R.L, H.I.V மாதிரி பரிசோதனை, E.C.G ஸ்கேன், கர்ப்பப்பை வாய் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படும் பணியாளர்களுக்கு மேல்சிகிச்சைக்காக இம்முகாமில் பரிந்துரை செய்யப்பட்டது.

நாளை (09.07.2026) முதல் தொடர்ந்து சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இன்று நடைபெற்ற இம்முகாமில் மாநகர நல அலுவலர் Dr.சுபாஷ்காந்தி, மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...