வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மழையில் நனைந்து கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.


கோவை: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை புதன்கிழமை காலையிலும் தொடர்ந்ததால், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், அலுவலகம் மற்றும் பணிக்குச் சென்றோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



சின்னக்கல்லார், சின்கோனா, ஈட்டியார், சிறுகுன்றா, காஞ்சமலை, வெள்ளமலை, பன்னிமேடு, சேக்கல்முடி, சோலையாறு அணை, மலுக்கப்பாறை, கருமலை, பச்சமலை, கவர்க்கல், தளனார், சக்தி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. இதனால் காலை நேரத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், பனிமூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.



மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மழையிலேயே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்கள் குடை மற்றும் மழைக்கோட்டுகளுடன் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

மழை பதிவின்படி, சின்னக்கல்லாரில் 27 மி.மீ., சோலையாறு அணை பகுதியில் 24 மி.மீ., வால்பாறையில் 21 மி.மீ., சின்கோனாவில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, வால்பாறையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள சோலையாறு அணைக்கு 853.30 கனஅடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. 165 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 83 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், அணையிலிருந்து 1,365 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வால்பாறை மலைப்பகுதிகளில் மேலும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...