கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற்றும் வ.உ.சி. பூங்காவில் சர்வதேச தரத்திலான நீச்சல் குளங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்குகள் மற்றும் நீச்சல் குளங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இன்று (06.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்கு உட்பட்ட நேரு உள்விளையாட்டு மைதானத்தின் எதிரே தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து ஆகிய உள்விளையாட்டு அரங்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த விளையாட்டு அரங்குகள் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.






வ.உ.சி. பூங்காவில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் மற்றும் ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மற்றொரு நீச்சல் குளம் ஆகிய கட்டுமானப் பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நீச்சல் குளங்கள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு, நீச்சல் வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.




ஆய்வின் போது ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இந்த திட்டங்கள் முடிவடைந்தால், கோயம்புத்தூர் நகரத்தில் விளையாட்டு வசதிகள் கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலம் வார்டு எண்.70க்கு உட்பட்ட தேவாங்கபேட்டை சாலையில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சிரியன் சர்ச் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்கு உட்பட்ட புல்லுக்காடு பகுதியில் சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, சிசிடிவி கேமரா பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார். குப்பைகள் சாலையோரங்களில் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.




மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி வாகனம் பழுதுபார்க்கும் இடத்தினையும், மேற்கு மண்டலம் வார்டு எண்.45க்கு உட்பட்ட சங்கனூர் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




இந்த ஆய்வின் போது, மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...