மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்


மேட்டுப்பாளையம், சங்கர் நகரில் வசிக்கும் ரவி என்பவரது மகன் உதயா (20). இவரது மனைவி ஆனந்தி (18). இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆனந்தி வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று ஆனந்தி தலைவலிக்கு சிகிச்சை பெற மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 14 எண் கொண்ட பேருந்தில் மேட்டுப்பாளையம் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, தாலூகா அலுவலகம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது உதயா தனது மனைவி ஆனந்தியை சமாதானம் செய்து சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ஆனந்தி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த உதயா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தியின் மார்பில் குத்திவிட்டு உதயா தப்பி ஓடியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தப்பி ஓடிய உதயாவை தேடிவருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...