கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தொடங்கி வைத்தார். நிலத்தடி நீர் வள மேம்பாடு, அடர்வனம் உருவாக்கம் மற்றும் தீவனப் பயிர் வளர்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு, ராஜேஸ்குமார், சரவணன், கலாராணி, வாட்டர் டெக் நிறுவனத்தின் தலைமை மனிதவள நிர்வாக அலுவலர் லயோனல் பால் டேவிட், தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், அலுவலர்கள், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக கொண்டம்பட்டியில் அடர்வனம் உருவாக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வாட்டர் டெக் நிறுவனத்தின் பங்களிப்புடன் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பயன்பாடின்றி இருந்த ஆழ்துளைக் கிணறுகளை மீளச் செயல்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் புதிய நீர்வள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு பயன்பாடின்றி இருந்த நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரக்கன்றுகளின் வளர்ச்சிக்குத் தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களும் வளர்க்கப்படவுள்ளன. அவை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் ஊராட்சியின் தேகாணி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 3.55 ஏக்கரில் தூர்வாரப்பட்ட குளத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் வள மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...