கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடுக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய நவீன செயல்முறைகள் பின்பற்றுவது தொடர்பாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.


Coimbatore: கோவையில் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் (IWMA) சார்பில், கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்சி செய்து மீள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

'கழிவு மேலாண்மையில் நெட் ஜீரோ' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்து பேசுகையில், தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக, ஆபத்தான கழிவுகளை கையாளுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும்,தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தொழில்துறையினரின் நடவடிக்கைகள் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் சி.ஐ.ஏ. தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் துணைத் தலைவர் தியாகராஜன், இணை செயலாளர் நடராஜன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த திட்டங்கள், தூய்மையான ஆற்றல் மாற்றம், கழிவிலிருந்து வள மீட்பு, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கான நிதி மற்றும் மானிய வாய்ப்புகள் குறித்த சிறப்பு அமர்வுகளும் கருத்தரங்கில் இடம்பெற்றன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...