கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார், சில மணி நேரங்களிலேயே சேலத்தில் கைது செய்யப்பட்டு கோவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார், சேலம் மாவட்டம் மேச்சேரியில் கைது செய்யப்பட்டார். அவரை சேலம் மேச்சேரி ரோந்து போலீசார் பிடித்து, கோவையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார், கார் விற்பனை தொடர்பான தகவல்களை சேகரித்து, அவற்றை தனது கார் என்பதுபோல் OLX செயலியில் பதிவேற்றி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் முன்பணமாக பணம் பெற்று மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆந்திராவில் கைது செய்யப்பட்டபோது உடல்நலக்குறைவு இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்தும் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் தமிழகத்திற்கு வந்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் இதேபோன்ற முறையில் இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவு இருப்பதாக தெரிவித்ததால், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை அங்கிருந்து தப்பியோடிய அவர் குறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய அதே பாணியில் தமிழக போலீசாரையும் ஏமாற்றி தப்பிய நிலையில், உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் அருகிலுள்ள மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் சேலம் நோக்கி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இன்று அதிகாலை பிம்முடு அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை தனிப்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய சில மணி நேரங்களிலேயே பிரபல மோசடி பேர்வழியான பிம்முடு அஜித்குமார் மீண்டும் போலீசாரிடம் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...