விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னியம்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தயார் செய்யப்பட்டது. அதன்படி, 600 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர். இதில், 150 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் உள்ளது. ஏனைய 450 ஏக்கர் நிலமும் அப்பகுதியில் குடியிருக்கும் சாதாரண மக்களிடமிருந்து கையகப்படுத்துவது என முடிவு செய்தனர்.



இத்திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்த போதிலிருந்தே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். தொடர்ந்து, கையகப்படுத்துவதை நிறுத்த முடியாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.

இதைத்தொடர்ந்து, கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை விலை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க துவங்கினர். ஆனால், அதையும் மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக வந்தது. அதில், சந்தை விலையோ அல்லது, 2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையும், மாநில அரசு அமல்படுத்த தயங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று சின்னியம்பாளையம் ஊராட்சி 4-வது வார்டு பொதுமக்கள் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் 150 வீடுகளும், 30 தொழிற்சாலைகளும் உள்ளன. இதனால் 3 ஆயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். 

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 60 லட்சம் ரூபாய் மற்றும் கூடுதலாக 30 லட்சம் என மொத்தம் 90 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தனர். ஆனால், தற்போது 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போதைய சந்தை விலையே ஒரு சென்ட் 10 லட்சம் வரை செல்லும் போது அரசு அறிவித்துள்ள தொகை ஏமாற்றம் அளிக்கிறது.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மேலும், எங்களது பகுதிக்கு விரைவில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...