கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 9-ம் தேதி இரவு கோவில் வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக நுழைந்த நபர் ஒருவர், அங்கு இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடியதாக கூறப்படுகிறது. பின்னர், சிலையை வெள்ளை நிற பையில் மறைத்து வைத்து கோவிலில் இருந்து வெளியேற முயன்றுள்ளார்.



அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த கோவில் அர்ச்சகர்கள், ஜோதிபுரத்தைச் சேர்ந்த சதாசிவம் (68) மற்றும் குமாரசாமி ஆகியோரின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அவரது பையை சோதனையிட்டபோது, அதில் திருடப்பட்ட விநாயகர் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரையும் மீட்கப்பட்ட சிலையையும் பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் சங்கனூர் சாலையைச் சேர்ந்த நடராஜன் (54) என்பது தெரியவந்தது.

பின்னர், நடராஜனை கைது செய்த போலீசார், அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலில் துணிகரமாக நடைபெற்ற திருட்டு முயற்சி அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...