வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை, இயக்க வளர்ச்சி மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தனர்.

Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வி தி லீடர் இயக்கத்தின் உள்ளரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பாக, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு பாலாஜி உத்தம ராமசாமி தலைமை வகித்தார். பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தார். சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்புரை வழங்கினார்.



கூட்டத்தில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என்றும், பொதுமக்களை நேரில் சந்தித்து இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



இந்தக் கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்டப் பொருளாளர் பிரபு, முன்னாள் செயலாளர் சாந்தி, பிரவீன், விஜயகுமார், மாரிசாமி, எல்.ஐ.சி. பாலு, கூடலூர் நகராட்சிக் கவுன்சிலர் கல்யாணசுந்தரம், கிருபாகரன், வீரபாண்டி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மண்டலத் தலைவர்கள் மகேந்திரன், மகேந்திரராஜ், சரவணகுமார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...