கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Coimbatore:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன் (42) மற்றும் செங்காளியப்பன் (59) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இருவரும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கருதப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் குண்டர் (Bootleggers) தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பாதகமாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், தங்களது பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 94981 81212 என்ற உதவி எண் மற்றும் 7708 100100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன் (42) மற்றும் செங்காளியப்பன் (59) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இருவரும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கருதப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் குண்டர் (Bootleggers) தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பாதகமாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், தங்களது பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 94981 81212 என்ற உதவி எண் மற்றும் 7708 100100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.