ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அவரை அமைச்சரவை மற்றும் தவெக-விலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Coimbatore:

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக கூறினார். அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சில நபர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சம்பந்தப்பட்ட அனைவரின் தொடர்புகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஊழலற்ற மற்றும் போதைப்பொருள் இல்லாத ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போதைய குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையிலும், தவெக-விலும் தொடர்வது சரியா என்ற கேள்வியை எழுப்பிய கிருஷ்ணசாமி, குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முழுமையாக முடிந்து உண்மை வெளிவரும் வரை அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த நிதியின் மூலாதாரம் குறித்து தெளிவு பெற வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, ஆளுநர் மற்றும் விசாரணை அமைப்புகள் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

குடும்பத்தினர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது, ஆதவ் அர்ஜுனா தாமாக முன்வந்து பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தவெக அரசின் ஒரு மாத ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், தற்போதைய விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...