ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அவரை அமைச்சரவை மற்றும் தவெக-விலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Coimbatore:

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக கூறினார். அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சில நபர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சம்பந்தப்பட்ட அனைவரின் தொடர்புகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஊழலற்ற மற்றும் போதைப்பொருள் இல்லாத ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போதைய குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையிலும், தவெக-விலும் தொடர்வது சரியா என்ற கேள்வியை எழுப்பிய கிருஷ்ணசாமி, குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முழுமையாக முடிந்து உண்மை வெளிவரும் வரை அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த நிதியின் மூலாதாரம் குறித்து தெளிவு பெற வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, ஆளுநர் மற்றும் விசாரணை அமைப்புகள் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

குடும்பத்தினர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது, ஆதவ் அர்ஜுனா தாமாக முன்வந்து பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தவெக அரசின் ஒரு மாத ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், தற்போதைய விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக கூறினார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...