கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மருத்துவர்கள், மாணவர்கள், தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, வெறிநாய்க்கடி இல்லாத நகரமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய்க்கடியைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தெருநாய்களுக்கான வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வார்டு எண் 50, 51, 52, 54 மற்றும் 100 ஆகிய பகுதிகளிலும், அவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.






மாநகராட்சியின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நடத்தப்பட்ட இந்த தடுப்பூசி முகாமுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் ஆதரவோடு, நான்கு கால்நடை மருத்துவப் பயிற்சி மாணவர்கள் தடுப்பூசி குழுக்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர்கள், கால்நடை மருத்துவப் பயிற்சி மாணவர்கள், களப் பணியாளர்கள், விலங்குகள் நலன் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள், நாய்களைப் பிடிக்கும் குழுக்கள் மற்றும் பிற உதவிப் பணியாளர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் சுமார் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.




இதன் மூலம் குறித்த பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி செலுத்தும் பரப்பளவும் கணிசமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கைக்கு முழுமையான தடுப்பூசி பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து மண்டலங்களிலும் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.




தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் வெறிநாய்க்கடி தடுப்பூசி (ARV) மற்றும் விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடு (ABC) திட்டங்களின் மூலம், தெருவிலங்குகளின் மனிதாபிமானமான மேலாண்மை மற்றும் நலனை உறுதி செய்வதுடன், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் மாநகராட்சி சிறப்பாக பணியாற்றி வருகிறது.




மேலும், கால்நடை பராமரிப்புத் துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் களப் பணிக்குழுக்களின் ஒத்துழைப்புக்கு கோவை மாநகராட்சி சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்வதுடன், தடுப்பூசி குழுக்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, கோவை மாநகராட்சியை வெறிநாய்க்கடி இல்லாத நகரமாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...