கோவையில் சுவரொட்டி ஒட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்: மேலும் கடும் நடவடிக்கை எச்சரிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ், சுவரொட்டிகளை அகற்றவும், தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதிக்கவும், சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார். போத்தனூர் நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ், விளம்பர அட்டைகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராக மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விளம்பரங்கள் அகற்றப்படுவதுடன், தொடர்புடையவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆகிய ஐந்து மண்டலங்களின் வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பொது இடங்கள், சாலையின் மையத் தடுப்புகள், மின்கம்பங்கள் ஆகியவற்றில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் மற்றும் விளம்பர சுவரொட்டிகள் மாநகராட்சியின் மூலம் அகற்றப்படும்.




தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-ன் படி, மாநகரில் விளம்பரப் பலகை, மின்னணு திரை மற்றும் விளம்பர அட்டை ஆகியவற்றில் விளம்பரம் செய்ய மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் 15 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பம் செய்து, அதற்கான உரிய தொகையைச் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் தொடர்புடைய விளம்பர அச்சு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 117-ன் படி விளம்பரப் பலகைகள் வைப்பவர்கள் மீது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.20,000 அபராதம் அல்லது கைது நடவடிக்கை ஆகிய இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.




பிளக்ஸ், விளம்பர அட்டைகள் வைப்பவர்கள் மீது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.




மேலும், தெற்கு மண்டலம் போத்தனூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலப் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.




மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்குமாறு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...