கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறுவர்களுக்கான கோடை பயிலரங்கு நிறைவு விழா நடைபெற்றது

கோவை கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மே 29, 2026 அன்று நிறைவு விழா நடைபெற்றது. பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகிய துறைகளில் சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்றனர்.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நடத்தப்பட்ட நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மே 29, 2026 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய Dr. இராச. வசந்தகுமார், குழந்தைகள் பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகியவற்றில் பயிற்சி பெற நிகழ்த்துக் கலைப்புலம் நடத்திய கோடை கால பயிற்சி வகுப்பு சிறந்த வாய்ப்பாக அமைந்ததைப் பாராட்டினார். குழந்தைகள் இளமையில் கற்பது மனதை நல்வழியில் பக்குவப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் Dr. சு.இரவி மற்றும் உள்தர உறுதிப்பாட்டு மையத்தின் (IQAC) இயக்குநர் T. சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்த்துக் கலைப்புல முதன்மையர், பேராசிரியர் Dr. வெ.ஜனகமாயாதேவி விழாவில் வரவேற்புரையாற்றினார்.

நான்கு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சிறுவர் சிறுமியர் பங்கேற்று பயனடைந்தனர். குழந்தைகளுக்கு பல்வேறு கலை வடிவங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் Dr. பிரசீதா பால் நன்றியுரையாற்றினார். கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி குழந்தைகள் கலை பயிற்சி பெற்று சிறப்பித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...