கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறுவர்களுக்கான கோடை பயிலரங்கு நிறைவு விழா நடைபெற்றது

கோவை கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மே 29, 2026 அன்று நிறைவு விழா நடைபெற்றது. பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகிய துறைகளில் சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்றனர்.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நடத்தப்பட்ட நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மே 29, 2026 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய Dr. இராச. வசந்தகுமார், குழந்தைகள் பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகியவற்றில் பயிற்சி பெற நிகழ்த்துக் கலைப்புலம் நடத்திய கோடை கால பயிற்சி வகுப்பு சிறந்த வாய்ப்பாக அமைந்ததைப் பாராட்டினார். குழந்தைகள் இளமையில் கற்பது மனதை நல்வழியில் பக்குவப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் Dr. சு.இரவி மற்றும் உள்தர உறுதிப்பாட்டு மையத்தின் (IQAC) இயக்குநர் T. சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்த்துக் கலைப்புல முதன்மையர், பேராசிரியர் Dr. வெ.ஜனகமாயாதேவி விழாவில் வரவேற்புரையாற்றினார்.

நான்கு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சிறுவர் சிறுமியர் பங்கேற்று பயனடைந்தனர். குழந்தைகளுக்கு பல்வேறு கலை வடிவங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் Dr. பிரசீதா பால் நன்றியுரையாற்றினார். கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி குழந்தைகள் கலை பயிற்சி பெற்று சிறப்பித்துள்ளனர்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...