சூலூர் சிறுமி வழக்கு: சம்பவ இடத்திற்கு குற்றவாளியை அழைத்துச் சென்று விசாரணை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி கார்த்தியை சம்பவ இடமான கண்ணம்பாளையம் குளக்கரைக்கு அழைத்து வந்து போலீசார் கள விசாரணை மேற்கொண்டனர். மூன்று நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் காவலில் உள்ள முக்கிய குற்றவாளி கார்த்தியை சம்பவம் நடைபெற்ற கண்ணம்பாளையம் குளக்கரை பகுதிக்கு நேரில் அழைத்து வந்து தனிப்படை போலீசார் கள விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி எவ்வாறு கடத்தப்பட்டார், சம்பவ இடத்திற்கு எப்படி அழைத்து வரப்பட்டார், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை எவ்வாறு நடைபெற்றது, பின்னர் உடல் எங்கு வீசப்பட்டது உள்ளிட்ட விவரங்களை கார்த்தியிடம் இருந்து பெற்று, வீடியோ பதிவுகளுடன் போலீசார் சாட்சியங்களை சேகரித்தனர்.

இந்த கள விசாரணை நடைபெற்றதை, சூலூர் DSP கரிகால் பாரி சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறைக்குள் தாக்குதலுக்கு உள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இந்த விசாரணை நடைபெற்றது.


இதற்கிடையே, வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

வழக்கில் தேவையான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் விரைவாக திரட்டப்பட்டு வருவதாகவும், இன்னும் அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் முழுமையான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் நடத்தப்பட்ட கள விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் முக்கியமான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...