கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து இன்று (ஜூன் 3) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தமிழக அமைச்சரவையில்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளசம்பத்குமார் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் என அமைச்சரவையில் இருவர்இடம்பெற்றுள்ளனர்.


கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் வகையில் சம்பத்குமார் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள், துறை சார்ந்த பணிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை அவர் மேற்பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவி, மாவட்ட அளவிலான அரசு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை உள்ளடக்கியது. மேலும், கோவை போன்ற முக்கிய தொழில்துறை மற்றும் வணிக மையமாக விளங்கும் மாவட்டத்திற்கு இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...