வைசியால் வீதி பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம்- பொதுமக்கள் அவதி


கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வரும் வறட்சியின் காரணமாக அத்யாவசியத் தேவைக்குக்கூட நீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் இரு வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என்றே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு நிலவி வருகிறது.



இந்நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் சாக்கடை நீர் கலந்து வருவதாக வைசியால் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இன்று வைசியால் வீதி வித்யாலயா பள்ளி அருகே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அந்த நீர் முழுவதும் சாக்கடை நீர் கலந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வைசியால் உள்ளிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்றே சாக்கடை நீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாக்திடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...