கோவை நீதிமன்ற வளாகத்தில் நாய் துரத்தியதால் சுவரேறி குதித்த வடமாநில வாலிபர் பலி

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சி.சி.டி.வி. காட்சிகளில், நாய் துரத்தியதால் நீதிமன்ற சுவரேறி உள்ளே குதித்த அவர், இருட்டில் தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை கோபாலபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இருந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள், நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், இன்று அதிகாலை அந்த வாலிபர் கோபாலபுரம் பகுதியில் நடந்து சென்றபோது நாய் ஒன்று அவரை துரத்தியது தெரியவந்தது. நாயிடமிருந்து தப்பிக்க அவர் நீதிமன்ற வளாகத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார்.

அதன்பிறகும் பதற்றத்தில் வேகமாக ஓடியபோது, இருட்டில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வாலிபரின் சட்டைப் பையில் ரூ.250 மட்டும் இருந்ததாகவும், அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை வைத்து அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், கோவையில் எங்கு தங்கி வேலை பார்த்து வந்தார் என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...