+2 பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் தாமரைச்செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று தாமரைச்செல்வி எதிர்பார்த்திருந்தார்.

இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. அதில் தாமரைச்செல்வி தான் எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து ஆயிரத்து 88 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தேர்வில் தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்றதால் தாமரைச்செல்வி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த செட்டிபாளையம் போலீசார், சம்பவ இடதிற்கு சென்று தாமரைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...