தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள், குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தரும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய நுழைவாயில் மற்றும் வளாகப் பகுதிகளில் மொத்தம் 600 கார்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் சமயங்களில் வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஏற்கனவே இடப்பற்றாக்குறை பிரச்சினை நிலவி வரும் கோவை விமான நிலையத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகையின் போது நிலைமை மேலும் மோசமடைகிறது. நுழைவாயிலில் மூன்று லேன்கள் இருந்தபோதிலும், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் 11.50 மணி வரை சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து மூன்று விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேறிய நேரத்தில், அரசியல் பிரமுகரை வரவேற்க வந்த வாகனங்களால் நுழைவாயில் பகுதி முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தொடர்கதையாக மாறிவிட்ட நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண விமான நிலைய நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...