கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன் அண்ணாமலையின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.


கோவை: தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோவையில், பா.ஜ.க மையக்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலைஆதரவு போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தற்போது உயர்கல்விக்காக லண்டனில் தங்கி இருக்கும் அண்ணாமலை நேரடியாக பங்கேற்காத சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த போஸ்டர்களில் அண்ணாமலையின் புகைப்படத்துடன், “Fearless Minds Have No Limits” — அதாவது “பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை” என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றுள்ளது. அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், “Army of Dheeran Annamalai” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், கோவை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும், அவரது ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தியிருப்பது, பா.ஜ.க உள்கட்சிக்குள் புதிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...