SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது.


கோவை: 2026 மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றது. சிவகங்கை 97.54 சதவீதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் 97.41 சதவீதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை மாவட்டம் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிறப்பிடம் பிடித்து மாநில அளவில் 7-வது இடத்தை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 37,844 மாணவர்களில் 36,742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும், திருப்பூர் 96.28 சதவீதம் தேர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் 96.32 சதவீதம் மற்றும் நாமக்கல் 96.01 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

சேலம் மாவட்டம் 94.21 சதவீதம் தேர்ச்சியையும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முறையே 93.94 சதவீதம் மற்றும் 89.43 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்துள்ளன.

மாநிலம் முழுவதும் போலவே, கொங்கு மண்டல மாவட்டங்களிலும் மாணவிகள் தொடர்ந்து மாணவர்களை விட அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முன்னிலை வகித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதம் ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.47 சதவீதம் தேர்ச்சியும், மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...