கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: ​கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

​இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறுகிறது. 

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வருகை தந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

​இந்த முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு ஏதுமில்லை மற்றும் நுழைவு முற்றிலும் இலவசமாகும். 

பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 

விண்ணப்பதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். 

கூடுதல் விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...