கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வருகை தந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு ஏதுமில்லை மற்றும் நுழைவு முற்றிலும் இலவசமாகும்.
பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வருகை தந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு ஏதுமில்லை மற்றும் நுழைவு முற்றிலும் இலவசமாகும்.
பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.