கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் உள்ளிட்ட தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். குப்பை பிரித்தெடுக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



பீளமேடு பெரியார் வீதி பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் தினசரி முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.





அதேபோல, பீளமேடு கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த சாக்கடை மண்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியையும் கவுன்சிலர் நேரில் ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் முழுமையாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்தார்.





மேலும், பீளமேடு பாரதி காலனி ஐந்தாவது வீதி பகுதியில் ஏற்பட்டிருந்த சாக்கடை அடைப்பை ஏர் கம்ப்ரசர் லாரி மூலம் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்து மக்களுக்கு நிவாரணம் அளிக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி பிரிந்தார் உடன் இருந்தார்.





பீளமேடு சாய்பாபா கோயில் அருகில் தினசரி குப்பை சேகரிக்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை சேகரிப்பு பணி சரிவர நடைபெறுவதை உறுதி செய்தார். மக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.

வார்டு 27 பீளமேடு பகுதியில் தூய்மை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடியிருப்போரின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கவுன்சிலர் அம்பிகா தனபால் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...