மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.



நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லாரிகள் மூலம் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால், வாரத்தின் பெரும்பாலான நாட்களில் லோடுகளை இறக்குவதற்காக வரும் கனரக லாரிகள் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த சாலையின் வழியாகவே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், நெல்லித்துறை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவசர மருத்துவ உதவிக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் லாரி டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் அது கைகலப்பாக மாறுவதாகவும் கூறப்படுகிறது.

லாரிகளை முறையாக சாலையோரத்தில் நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டும், சிலர் காவல்துறை உத்தரவுகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். எனவே, தொடர் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...