பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளை சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், ரயில் நிலைய வளாகம், பார்சல் புக்கிங் பிரிவு, நிலைய அதிகாரி அலுவலகம், பணியாளர்களின் ஓய்வறைகள் மற்றும் பயணிகள் காத்திருப்போர் அறைகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரயில் நிலையச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும், ரயில்வே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பலகைகளை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்த அவர், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...