FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை:

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருட்களின் அதிகரிப்பும் இளைஞர் சமுதாயத்தை கடுமையாக பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநில அரசே மதுக்கடைகளை நடத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதில் கிடைத்ததும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டை மதுவும் போதையும் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து முழுமையான மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, அவை உட்புற சாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு பல இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகியதாகவும், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத மதுவிற்பனை மையங்கள் இயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், கடந்த ஆட்சியில் FL2 உரிமம் மூலம் மனமகிழ் மன்றங்கள் மற்றும் சமூக கிளப்புகளுக்கு வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகள் சமூக சீரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இளைஞர்களிடையே மது அருந்துவதை சமூக அந்தஸ்தாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சமூக நலனை கருத்தில் கொண்டு FL2 மதுபான உரிமங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், அவற்றின் வருவாய் மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Newsletter

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...