கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Coimbatore: கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிட வளாகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், இரண்டு வெளிநாடுகளுக்கும் தினமும் சராசரியாக 31 முதல் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பயணிகளை வழியனுப்பவும், வரவேற்று அழைத்து செல்லவும் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இத்தகைய சூழலில், விமான நிலைய நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் செயல்படாததால், அது பயன்பாட்டில் உள்ளதா என்பதில் குழப்பம் நிலவுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுடுநீர் மற்றும் குளிர்ந்த நீர் வசதியுடன் கூடிய நவீன குடிநீர் இயந்திரங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், நுழைவாயில் அருகே செயல்பட்டு வரும் கழிப்பிடங்களும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், மொத்தம் மூன்று கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு கழிவறை மட்டுமே உள்ளதாகவும், சிறுநீர் கழிப்பதற்காக இரண்டு பேசின்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் மட்டுமின்றி டாக்ஸி ஓட்டுநர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கழிப்பிடங்களை பயன்படுத்தி வரும் நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமான நிலையத்துடன் தொடர்பில்லாத பலரும் வெளிப்புற பகுதிகளில் இருந்து அருகிலுள்ள கேட் வழியாக வந்து கழிப்பிடத்தை பயன்படுத்துவதால், சுகாதார பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கோவை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பராமரிப்பில் காணப்படும் குறைபாடுகள் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமான நிலைய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...