பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. விவசாயத்தின் அடிப்படை தேவையான தண்ணீர் பெற உதவும் இப்பொருட்களுக்கு வரி குறைப்பு அவசியம் என தெரிவித்துள்ளனர்.


Coimbatore: அடிப்படை தேவையான தண்ணீரை பெற உதவும் மோட்டார் பம்ப்செட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு, ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்த வேண்டும் என, இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.




இது குறித்து இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் கூறும் போது, அடிப்படை தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மோட்டார் பம்ப்செட் பொருட்கள் உதவுகின்றன. நாடு முழுவதும் பம்ப்செட் பொருட்கள் தேவையை பூர்த்தி செய்வதில் கோவை மாவட்டம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. வேளாண் துறைக்கு மத்திய மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வரும் நிலையில், விவசாயத்துக்கு அடிப்படை தேவையான தண்ணீர் பெறுவதற்கு உதவும் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முன்பு 12 சதவீதமாக இருந்த நிலையில், சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி காரணமாக தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.




ஜிஎஸ்டி வரி விதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வரி உயர்த்தப்பட்டுள்ளது தொழில் நலிவடைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் Vijay தலைமையிலான தமிழக அரசு, எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலம் சார்பில் பங்கேற்கும் நிதி அமைச்சர், தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று பம்ப்செட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என கார்த்திக் கோரிக்கை விடுத்தார்.




வரி விதிப்பு குறைக்கப்பட்டால் மக்களும், இத்தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களும் பயனடைய வாய்ப்பு ஏற்படும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.




கோவை மாவட்டம் நாடு முழுவதும் பம்ப்செட் உற்பத்தியில் முன்னணியில் உள்ளதால், இந்த வரி குறைப்பு உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பாதுகாப்பிற்கும் முக்கியமானது என தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...