பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Coimbatore: பவானி தடுப்பணையில் மேற்கொள்ளப்படும் ஆண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு செயல்படும் பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ், சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள பவானி தடுப்பணையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தினால் கதவணை மற்றும் எந்திரங்களின் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (7-5-2026) முதல் 10-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பில்லூர்-3 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறும், அவசியமற்ற நீர் விரயத்தை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, குடிநீர் விநியோகம் வழக்கம்போல் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...