ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை:

இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைக்கப்படுவதை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அண்மையில் ரயில்வே வாரியம், 14.8 லட்சம் பணியிடங்களில் சுமார் 2 சதவீதத்தை இந்த ஆண்டில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்கள் குறைப்பு பாதுகாப்பு மற்றும் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த முடிவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, ரயில்வே துறையில் ஏற்கனவே 30,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவை நிரப்பப்படாமல் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

காலியான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இப்படிப்பட்ட சூழலில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது ரயில்வே துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறினார். ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், பொதுத்துறையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...