பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்பட அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள், கூலிங் பெயிண்ட், பச்சை நிற மேட் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 98 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு சென்று வருகின்றனர். இப்படி செல்லும் பக்தர்கள் வெயில் காரணமாக கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போது கால்கள் சுடுவதால் சிரமம் அடைகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள், வெப்பத்தை தடுக்கின்ற கூலிங் பெயிண்ட் அடித்தல், அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், மருதமலை, கோனியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருதமலை முருகன் கோயிலில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வலம் வர தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பிரகாரத்தை சுற்றி தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. கோனியம்மன் கோயிலில் முதலில் கூலிங் பெயிண்ட் அடித்த போதும், பக்தர்கள் கால்கள் சுடுவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பச்சை நிற மேட் கோயில் பிரகாரத்தில் போடப்பட்டுள்ளது. இது நல்ல பலன் அளித்துள்ள நிலையில், மாநகரில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களிலும் பச்சை நிற மேட் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பக்தர்கள் வெயிலின் சூடு பாதிக்காத வகையில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...