கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் வாக்களிக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் Stalin கோரிய நிலையில் இது நடந்துள்ளது.


Coimbatore: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் வாக்களிக்காதது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.




Jayalalithaa ஆட்சி காலத்தில் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. Jayalalithaa மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்து அமைச்சர் பதவியும் பெற்றார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் அமைச்சர் பதவியை இழந்தார்.




செந்தில் பாலாஜி இருந்தால் கரூரில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது முதல்வர் Stalin நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரம் Vijay கரூருக்கு சென்றபோது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் செந்தில் பாலாஜி மீது பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்ததால் இந்த முறை அவரை கோவையில் களமிறக்கினார் முதல்வர் Stalin. அதோடு, கோவை திமுக தேர்தல் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜியை நியமித்தார்.




இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை. வழக்கமாக செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர் ராமேஸ்வரம்பட்டி புதுப்பாளையத்தில் உள்ள வாக்கு சாவடியில் தான் வாக்களிப்பார். ஆனால் நேற்று காலை செந்தில் பாலாஜியின் சகோதரர் Ashok Kumar அங்கு வந்து வாக்களித்த போது 'அண்ணன் வருவார்' என அவர் சொல்லிவிட்டு சென்றார்.




ஆனால் மாலை 6 மணி ஆகியும் செந்தில் பாலாஜி அங்கு வந்து வாக்களிக்கவில்லை. செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாலும், கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவர் கரூருக்கு வாக்களிக்க வரவில்லை என சொல்லப்படுகிறது.




அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என முதல்வர் Stalin கோரிக்கை வைத்த நிலையில் செந்தில் பாலாஜியே அதை பின்பற்றவில்லை என அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...